Tuesday, December 22, 2015

இயற்கை மருத்துவம்: சூழலும் ஆரோக்கியமும் - தொடர்ச்சி.

இந்த முயற்சியில் நாம் செய்ய வேண்டியது என்ன?
1. இயற்கை சூழலுக்கு முரண்படாமல் எளிமையானதாக வாழ்க்கையை அமைத்து கொள்வது
2. இயற்கை தன்மை மாறாத உணவுகளை உட்கொள்வது ( பச்சை காய் கறிகள், பழங்கள் முதலியவை)
3. பேராசை, பொறாமை, கோபம், சுயநலம் முதலிய குணங்களில் இருந்து தன்னை தானே விடுவித்து கொள்வது.
4. இந்த உலகில் வாழும் பல கோடி உயிர்களில் மனிதன் ஒரு சிறு பகுதி தான் என்பதை உணர்ந்து பிற உயிர்களும் நம்மோடு சேர்ந்து வாழ கூடிய வகையிலான ஆரோக்கியமான சூழலை உருவாக்குவது.
5. பணத்தை அடிப்படையாக கொண்ட சமூகத்தில் இருந்து விலகி ஒத்த கருத்துள்ள மனிதர்களுடன் இணைந்து சமூகமாக வாழ்வது.
6. இயற்கை பேராற்றலின் முக்கியதுவத்தை உணர்வது, வாய்பிருக்கும் போது நகர வாழ்க்கையில் இருந்து விலகி காடுகள், மலைகள், நீர் நிலைகள் சார்ந்து வாழ பழகுவது, அவை மேலும் அழிவுறாமல் காப்பது.
7. இயற்கையிடம் சரணடைவத்தின் மூலம் நம் உடல், மனம் மற்றும் ஆன்மீக வாழ்வை ஒருங்கிணைப்பது.

No comments:

Post a Comment