Thursday, December 24, 2015

இயற்கையிடம் சரணடைவோம்!

உடலின் சீரிய இயக்கம் ஆரோக்கியம், குறைபாடோடோ, மிகையாகவோ இயங்குவது நோய். உடலின் சீரிய இயக்கம் உள் மற்றும் புற சூழலினால் நிர்ணயிக்கபடுகிறது, நகர வாழ்வில் சிறப்பான இயற்கை உணவை உண்பவர்களும் ஆரோக்கிய குறைபாட்டோடு இருக்கிறார்கள், இயற்கை சூழலில் சிறந்த உணவை உண்ணாமலும் ஆரோக்கியத்தோடு வாழ்பவர்களும் இருக்கிறார்கள், உள் சூழல் நாம் உண்ணும் உணவு, வாழ்வியல் பழக்க வழக்கங்களினால் நிர்ணயிக்கப்படுகிறது, வெளி சூழல் இயற்கையின் கொடை மற்றும் மனிதனின் பொறுப்புணர்ச்சியினால் கட்டமைக்க படுவது. ஆரோக்கிய வாழ்வை வாழும் வாழ விரும்பும் அனைவரும் சிறப்பான வெளிச்சூழலை ஏற்படுத்த உறுதியோடு கைக்கோர்ப்பது அவசியம். இந்த தீப ஒளி திருநாள் நமக்கும் நம் சந்ததியினருக்கும் சிறப்பான எதிர்காலத்தை அருள இயற்கையிடம் சரணடைவோம்.

No comments:

Post a Comment